ரோஜா முத்தையா
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/11/Roja_Muthiah%2C_artist%2C_book_collector%2C_Tamil_Nadu.jpg/220px-Roja_Muthiah%2C_artist%2C_book_collector%2C_Tamil_Nadu.jpg)
ரோஜா முத்தையா என்பவர் அடிப்டையில்ஓவியர் ஆவர். இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டததில் உள்ள கோட்டையூர் ஆகும். இவர் தன் சொந்த முயற்சியால் “ரோஜா ஆர்ட்சு” என்னும் கலைக்கூடத்தை நிறுவினார். தன் சொந்த முயற்சியால் பல்லாயிரக்கணக்கான அரிய நூல்களைச் சேகரித்து பராமரித்தார். [1] மறைந்த இவரின் பெயரால் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என்ற நூலகம் சென்னையிலுள்ள தரமணியில் அமைந்துள்ளது. இந்நூலகத்தை சிக்காகோ பல்கலைக்கழகத்தினர் ஊக்கத்தொகை அளித்து பராமரித்து வருகின்றனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ஆனந்த விகடனின் பொக்கிஷம் பகுதியில் வெளியான செய்தி